நமது சீர்திருத்தவாத பாரம்பரியம்

ஐரோப்பாவையே கலங்கவைத்த ஆண்டு 1517. கத்தோலிக்க மதத்திற் கெதிரான திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்த ஆசீர்வாதமான ஆண்டு. அந்த ஆண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட சீர்திருத்தத்தின் காரணமாகத்தான் இன்றைக்கு இந்தப் பத்திரிகையைக் கூட சத்தி யத்தின் அடிப்படையில் நம்மால் வெளியிட முடிகிறது. 1517ம் ஆண்டில் அக்டோபர் 31ம் தேதி நிகழ்ந்த, திருச்சபை சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமான அந்த நிகழ்ச்சியின் காரணமாக வருடாவருடம் உலகெங்கும் சீர்திருத்த சபைகள் அந்த நாளை சீர்திருத்த நாளாக (Reformation Day) நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

கத்தோலிக்கத்தின் காட்டாட்சியும், லூதரின் சத்திய வேட்கையும்

பதினாறாம் நூற்றாண்டில் உலகின் பெரும்பாகங்களைத் தன் கரத்தில் வைத்து கொடூர ஆட்சி செலுத்தி வந்தது ரோமன் கத்தோலிக்க மதம். அதன் தலைவனான போப் கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுருவின் தெய்வீக வழித்தோன்றலாக தன்னை இனங்காட்டிக் கொண்டு நாடுகளையும், மக்களையும் மதத்தின் அடிப்படையில் ஆட்சிபுரிந்து வந்த காலம் அது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு பல நூற்றாண்டுகளாகவே கத்தோலிக்க மதத்தின் அட்டகாசங்களும், அட்டூழியங்களும் மக்களை அம்மதத்தின்மீது வெறுப்படையச் செய்திருந்தன. இருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாதபடி அரசும், பேரரசனும், இளவரசர்களும் கத்தோ லிக்க மதத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். கத்தோலிக்க மதத்தையும், போப்பையும் எதிர்த்தவர்கள் உயிரையே இழக்க நேர்ந்தது. அப்படி உயிரிழந்தவர்கள் அநேகர். தன்னோடு முரண்பட்ட நாடாளும் அரசனை அவனுடைய குடும்பத்தோடு தன் மாளிகைக்கு முன்பாக பனியில் மூன்று நாட்கள் பசியோடு மண்டியிட்டு தனக்குக் கருணைகாட்டுமாறு கேட்க வைத்த சமயத்தலைவராக இருந்திருக்கிறார் ஒரு போப். இத்தனையையும் கடவுளின் பெயரில் செய்து கொண்டிருந்தது கத்தோலிக்க மதம்.

Continue reading