ஜோன் பனியனின் ‘மோட்சப் பயணம்’

ஜெரமி வாக்கர் (Jeremy Walker) இங்கிலாந்தில் மெயிடன்போவர் பாப்திஸ்து சபையின் போதகர்களில் ஒருவராக பணிபுரிந்து வருகிறார். இளமைப் பருவத்திலேயே சீர்திருத்தவாத, பியூரிட்டன் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஞானத்தைப் பெற்றிருக்கும் வாக்கர் ஜோன் பனியன் (John Bunyan) படைத்த மோட்ச பயணத்தின் (Pilgrims progress) அருமை பெருமைகளையும் அதை நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பதையும் இவ்வாக்கத்தில் விளக்குகிறார்.

“ஐயா இந்த விஷயத்தில் என்னுடைய முடிவு உறுதியானது. இன்று நான் சிறையில் இருந்து வெளிவந்தால் கர்த்தரின் துணையோடு நாளை மறுபடியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன்” என்று தன்னை சிறையில் தள்ளிய வழக்குமன்ற நீதியரசர்களைப் பார்த்து ஜோன் பனியன் கூறிய வார்த்தைகள் இவை. தன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந் திருந்தபோதும் பனியன் கர்த்தரின் பணியைக் கைவிட்டுவிடவில்லை. பன்னிரெண்டு வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டிருந்த காலங்களிலும் பனியனின் நாவு அவருடைய பேனாவின் மூலம் பேசியது. அவர் எழுதிய பல நூல்களில் குறிப்பிடத்தகுந்தது மோட்சப் பயணம் (Pilgrims Progress).

Continue reading