கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 2

கர்த்தருடைய வேதபோதனைகளின் அடிப்படையில் திருச்சபைகள் இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்று இந்த வருடத்தின் இரண்டாம் இதழில் ஆராய ஆரம்பித்தோம். அந்த ஆரம்ப ஆக்கத்தில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய உண்மையாக இன்று நம்மத்தியில் அப்போஸ்தலர்கள் இல்லை என்று தெளிவாக விளக்கியிருந்தேன். அப்போஸ்தலர்கள் இன்றிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்போஸ்தலர்கள் இன்று நம்மத்தியில் இல் லாததோடு அவர்களுடைய போதனைகள் அனைத்தும் வேதத்தில் வடிக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இன்று அப்போஸ்தலருக்குரிய அதிகாரம் கொண்டவர்கள் எவரும் இல்லை. முக்கியமாக இந்த உலகத்தில் கர்த்தருடைய விதிகளின்படி அமைக்கப்பட்டு இயங்கி வரும் திருச்சபைக்கு மட்டுமே ஆத்மீகக் காரியங்களுக்கான அதிகாரத்தைக் கர்த்தர் அளித்திருக்கிறார்.

இனி கிறிஸ்துவின் வழியில் இந்த உலகத்தில் அமைய வேண்டிய திருச்சபைப் போதனைகள் பற்றிய ஐந்து முக்கிய வேதவிதிகளை (The Principles of Mission) இந்த இதழில் இருந்து ஆராய்வோம். இந்த விதிகள் எக்காலத்துக்கும் உரியவை. எந்தவிதமான வேத போதனைகளையும் அறியாது, அறிந்திருந்தாலும் அவற்றிற்கு இடங்கொடுக்காது மனம் போன போக்கில் சுயநல நோக்கத்திற்காக வியாபார ஊழியம் நடத்தி தம்மையும் தம் குடும்பத்தையும் மட்டும் வளர்த்து வருகிறவர்கள் பெருகிக் காணப்படுகின்ற தமிழினத்தில் சிந்திக்கும் இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் இந்த வேத போதனைகளை ஆராய்ந்து பார்த்து தங்களைத் திருத்திக்கொண்டு கர்த்தருடைய மெய்யான திருச்சபைக்கு அடங்கி வாழ்ந்து ஆத்மவிருத்தி அடைவார்களானால் அதுவே நமக்கு போரானந்தமளிக்கும். இனி வேதம் போதிக்கும் திருச்சபை அமைப்புக் கான ஐந்து முக்கிய வேத போதனைகளை நாம் ஆராய்வோம்.

Continue reading