பிரசங்கமும், பரிசுத்த ஆவியும்

வேத அடிப்படையில் பிரசங்கத்தைத் தயாரித்துப் பிரசங்கிப்பதற்கு அவசியமான அம்சங்களில் கவனம் செலுத்திப் பிரசங்கம் பிரசங்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது எப்படி என்று இதுவரை பார்த்திருக்கிறோம். இத்தோடு பிரசங்கம் குறித்த சகல அம்சங்களையும் ஆராய்ந்து முடித்துவிட்டோம் என்று எண்ணிவிடக்கூடாது. நமது பிரசங்க ஊழியம், கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக, அவற்றின் நோக்கங்கள் நிறைவேற வேண்டு மானால் நம்முடைய உழைப்பையும் மீறிய பரிசுத்த ஆவியானவரின் அனுக்கிரகமும், வல்லமையும் அவசியம். அதாவது, நமது படிப்பையும், திறமைகளையும், உழைப்பையும் மீறிய கர்த்தரின் கிரியை அவசியம். மனிதனின் வேறு எந்தவிதமான மேடைப் பேச்சுக்கும், விரிவுரை களுக்கும் அவசியமில்லாத கர்த்தரின் விஷேச ஆசீர்வாதம் பிரசங்கம் மனிதர்களுக்குப் பயனுள்ளதாக அமைய அவசியமாகிறது. அதைத்தான் நாம் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகம் என்று அழைக்கிறோம். இது பரிசுத்த ஆவியானவர் பிரசங்கியிலும், பிரசங்கத்தின் மூலம் ஆத்துமாக்களின் இருதயங்களிலும் செய்கின்ற கிரியையாகும்.

பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் ஆள்தத்துவம். அவர் தேவன், கர்த்தர். இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகை சகல இடங்களிலும் தொடர பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரதிநிதியாக உலகில் செயல்பட்டு வருகிறார். தான் போதித்த அனைத்தையும் அப்போஸ்தலர்கள் நினைவுகூறும்படி ஆவியானவர் அவர்களுக்கு உதவுவார் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் திருச்சபை இந்த உலகில் நிறுவப்பட்ட காலமுதல் ஆவியானவர் சுவிசேஷம் சகல தேசங்களிலும், சகல குலமக்கள் மத்தியிலும் பரவி சபைகள் நிறுவ கிரியை செய்து வருகிறார். ஆவியானவருடைய கிரியையில்லாமல் சுவிசேஷம் பரவ முடியாது. திருச்சபைகள் நிறுவப்பட முடியாது.

Continue reading