பத்தாண்டு நிறைவு விழா நினைவுகள்!

2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2 ம் தேதி சனிக்கிழமை அன்று மதுரை ராயல் கோர்ட் ஹோட்டலில் மாலை 7 மணியளவில் திருமறைத்தீபம் இதழின் பத்தாண்டு நிறைவு விழா கர்த்தரின் கிருபையால் இனிதாக நிகழ்ந்தது. விழாவின் தலைமைப் பொறுப்பை சிவகாசியைச் சேர்ந்த போதகர் டேவிட் ஜெபராஜ் அவர்கள் ஏற்று சிறப்பாக நடத்தினார்கள். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சபைப் போதகர்களும், திருமறைத்தீப வாசகர்களும் பிற சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 240 பேர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் கலந்து கொண்டவர்களை மதுரை இவாஞ்சலிக்கள் பாப்திஸ்து சபைப் போதகர் ஸ்டீபன்சன் வரவேற்றுப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து திரு. ஜெயபால் அவர்கள் திருமறைத்தீபம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் பற்றியும், ஆசிரியர் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியப்பணி பற்றியும், பத்திரிகையின் தன்மை குறித்தும் விளக்கிப் பேசினார்.

Continue reading