இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு

அழைப்பு

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு என்ற போதனை எதைக் குறிக்கிறது என்பதையும், அந்தப் போதனையை அறிந்திருப்பதன் அவசியத்தைப் பற்றியும் கடந்த இதழில் ஆராய்ந்திருந்தோம். இந்தப் போதனையை நாம் விபரமாக தொடர்ந்து ஆராயவிருப்பதால் வாசகர்கள் இதற்கு முன்பு வந்துள்ள ஆக்கத்தையும் ஒருமுறை வாசித்து விட்டு இந்த ஆக்கத்தை வாசிப்பது பயன்தரும். இதே முறையில் ஒவ்வொரு இதழிலும் வரும் தொடர்களைப் படிக்கும்போது அதற்கு முன்வந்துள்ள ஆக்கத்தை வாசித்துவிட்டுப் படிப்பது நல்லது.

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை ஆராய்கிறபோது அதோடு தொடர்புடைய கிருபைகளில் எது முதலில் இடம்பெற வேண்டும் என்பதில் சீர்திருத்த இறையியல் போதகர்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்து வேறுபாடு இறையியல் போதனை பற்றிய கருத்து வேறுபாடு அல்ல. படிமுறை ஒழுங்கில் முதலில் வரவேண்டியது எது, அடுத்து வர வேண்டியது எது என்பது பற்றிய ஆரோக்கியமான கருத்து வேறுபாடு மட்டுமே. வேத சத்தியங்களைத் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதத்தைத் தீவிரமாக ஆராய்கிறபோது ஏற்படுகிற வேத அடிப்படையிலான ஆரோக்கியமான கருத்துவேறுபாடுகள் நல்லதே. அவற்றை இறையியல் குளருபடிகள் கொண்ட கருத்து வேறுபாடுகளாக நாம் கருதக்கூடாது.

Continue reading