இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு

மறுபிறப்பு

கடந்த இதழில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் கர்த்தரின் அழைப்பைக் குறித்த விளக்கத்தில், “திட்ப உறுதியான அழைப்பைக் கர்த்தர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கிறபோது அவர்களில் அதே நேரத்தில் உட்புற மாற்றங்களும் உடனடியாக ஏற்படுகின்றன. திட்ப உறுதியான அழைப்பையும், ஆத்துமாவில் நிகழும் உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றங்களையும் வேதம் பிரித்து விளக்குகிறது. இருந்தபோதும் இவை இரண்டும் ஒரே காரியத்தையே குறிப்பதாக இருக்கின்றன. அதாவது, திட்ப உறுதியான அழைப்பும், மறுபிறப்பும் ஒன்றே. இவை இரண்டையும் வேதம் பிரித்து விளக்கினாலும், ஒரே காரியத்தையே நாம் வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்” என்ற போதகர் ஜிம் டோமின் (Jim Domm) விளக்கத்தைத் தந்திருந்தோம்.

இந்த ஆக்கத்தில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் ‘மறுபிறப்பு’ (Regeneration or New Birth) எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பதை ஆராய்வோம். மனித சரீரத்தில் எல்லா அங்கங்களும் இணைந்து செயல்பட்டபோதும் அது பல பாகங்களைக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஒரு பாகத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள நாம் அந்தப் பாகத்தை மட்டும் தனியாக ஆராய்ந்து பார்ப்பதில்லையா? அதேபோலத்தான், மறுபிறப்பை மட்டும் தனியாக இனிப் பிரித்து ஆராயப் போகிறோம். இப்படி இறையியல் ரீதியாக மறுபிறப்பை மட்டும் தனியாக ஆராய்வதால் இரட்சிப்பைப் பற்றிய தெளிவான இறையியல் விளக்கத்தை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது.

Continue reading