ஸ்பர்ஜன் சிந்திய முத்துக்கள்

உங்கள் சிந்தனைக்கு

(“பிரசங்கிகளின் இளவரசன்” என்று அழைக்கப்பட்ட பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் (1834-1892) தன்னுடைய பிரசங்கங்களிலும், நூல்களிலும் முத்துக்களாய் உதிர்த்துள்ள ஆவிக்குரிய சிந்தனைகளைத் தொகுத்தளிக்கிறார் தஸ்மேனியாவின் தென் பிரஸ்பிடீரியன் சபையைச் சேர்ந்த ரேபன் கெமரன் ஸ்மித் (Raeburn Cameron-Smith). இது முதலில் ரிஃபோர்மர் (Reformer) என்ற இதழில் வெளிவந்தது. ஸ்பர்ஜன் விசுவாசித்த அதே சத்தியங்களை விசுவாசிக்கிறவர்களுக்கு இந்தச் சிந்தனை முத்துக்கள் நிச்சயம் ஊக்கந்தரும்.)

மாற்றம் (Change)

வளர்ச்சியடைந்து வரும் இந்தக் காலப்பகுதியில் ஆத்மீகம் பற்றிய கருத்துகள் இரயில் வண்டி வேகத்தில் வளர்ந்து வருகின்றன. ‘சுவிசேஷம் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்ற ஓர் புதிய கருத்து பலரை இன்று ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில் இது நிந்தனைக்கும், முட்டாள்தனத்திற்கும் இடைப்பட்ட ஓர் கருத்தாகவே காணப்படுகிறது. எண்ணிக்கையற்ற தொகையினரில் நித்திய ஜீவனுக்கேதுவாக திட்ப உறுதியாக சுவிசேஷம் பயன்பட்டிருக்கிறபோது இத்தகைய சிந்தனைகள் அதை மாற்றும் வீண் முயற்சியாக காலந்தாழ்த்திப் புறப்பட்டிருக்கின்றன. சகல ஞானமும் கொண்ட மாறாத தேவனின் வெளிப்பாடாக இருக்கின்ற சுவிசேஷத்தை நவீனப்படுத்தப் பார்க்கின்ற அசட்டுத்தனமாகவே இந்த முயற்சி தெரிகிறது.

Continue reading