இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு

மனமாற்றம்

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டியது மனமாற்றம் (Conversion). இதை விளக்கும் ஜோன் தோன்பெரி, (John Thornbury) “பரலோகத்திலிருக்கும் கர்த்தரின் பார்வையின்படி மனிதனில் அவர் செய்யும் கிருபையின் கிரியையாக மறுபிறப்பை வர்ணிப்போமானால், அதே காரியத்தை மனிதனுடைய அநுபவத்திலிருந்து நோக்குவதை மனமாற்றம் என்று வர்ணிக்கலாம்” என்று விளக்குகிறார். இதிலிருந்து மறுபிறப்பையும், மனமாற்றத்தையும் இறையியல் ரீதியில் தெளிவாக விளங்கிக் கொள்ளுவதற்காக இறையியல் கண்ணோட்டத்தில் நாம் பிரித்து ஆராய்ந்தாலும் அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

மறுபிறப்பு மனிதனில் பரிசுத்த ஆவியால் விதைக்கப்படும் புதிய ஜீவனின் வித்து; அந்த வித்து வளர்ந்து, அது மனிதனில் ஏற்படுத்தும் வெளிப்புற விளைவுகளையே மனமாற்றம் என்கிறோம். அதாவது, மறுபிறப்பை அடைந்த மனிதனில் நாம் காணும் வெளிப்புற விளைவுகளே மனமாற்றம். ஒரு மனிதனில் மனமாற்றம் ஏற்படுகிறபோது இரண்டு அம்சங்களை அவனில் காணலாம்: (1) மனந்திரும்புதல், (2) விசுவாசம்.

Continue reading