கிறிஸ்து போதிக்கும் திருச்சபை ஊழியத்தை வேதத்திலிருந்து ஆராய்ந்து வருகிறோம். இதில் மூன்றாவது தலைப்பான சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போ தும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடிய வேண்டும் என்பதை ஏப்ரல்-ஜூன் 2006 காலாண்டு இதழில் விளக்க ஆரம்பித்தோம். அவ்விதழில் கர்த்தருடைய திருச்சபையின் மகிமை புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்தோம். கர்த்தருடைய ஊழியங்கள் அனைத்தும் அவருடைய திருச்சபையினூடாக நடைபெற வேண்டியது எந்தளவுக்கு முக்கியமென்பதை உணர்வதற்கு அவருடைய திருச்சபையின் மகிமையைப் பற்றிய வேத அறிவு அவசியம். நாம் வாழ்கிற இக்காலப்பகுதியில் கர்த்தருடைய திருச்சபை பற்றிய அறிவு விசுவாசிகள் மத்தியில் அருகிக் காணப்படுகின்றது. திருச்சபை பற்றிய அறிவில்லாததால் அதில் வாஞ்சையின்றி கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருச்சபை பற்றிய உணர்வில்லாமல் புற்றீசல்போல் அதிகரித்து கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகை நம்மத்தியில் எண்ணிமாளாது. திருச்சபைக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற எண் ணப்போக்கில் அநேகர் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் இன்றைக்கு திருச்சபையில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இதன் காரண மாகவே கடந்த இதழில் வேதம் திருச்சபையின் மகிமையைப் பற்றி எந்தள வுக்கு ஆணித்தரமாக விளக்குகிறது என்று பார்த்தோம்
இனித் திருச்சபையைப் பற்றி அந்த ஆக்கத்தோடு தொடர்புடைய வேதம் போதிக்கும் சில முக்கியமான உண்மைகளை இந்த இதழில் பார்ப்போம்.