தேவனும் மனிதனுமாய் . . .

பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் சபை மக்களுக்கு எழுதிய அறிவுரையில் இயேசு கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக் கொண்டதைப் போல அவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும் தாழ்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எழுதுகிறார். இப்பகுதியில் இயேசு கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக் கொண்ட விதத்தை விளக்கும் பவுல் ஆறு முதல் எட்டுவரையுள்ள வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் . . . அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு . . . தம்மைத் தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:6~8)

கிறிஸ்துவின் தாழ்த்துதல் என்று பவுல் இப்பகுதியில் விளக்குவது கிறிஸ்து மனிதரூபமெடுத்து இவ்வுலகிற்கு வந்து பட்ட பாடுகளைப் பற்றித்தான்; அதுவும் அப்பாடுகளின் உச்சகட்டமான சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியே பவுல் விளக்குவதைக் காண்கிறோம். இவ்விதமாக கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக்கொண்டது உலகத்தோற்றத்துக்கு முன்பாக பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுடைய பாவநிவாரணத்திற்கு வழியேற்படுத்தி அவர்களுக்கு இரட்சிப்பைப் பெற்றுத்தரவே. இதெல்லாம் நிறைவேறுவதற்கு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமிருந்தது.

Continue reading