கேள்வி: “கிறிஸ்தவ சபை” என்ற பெயரில் ஒரு பிரிவு நம் நாட்டில் இருக்கிறது. அது மட்டுமே உண்மையான சபை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் அங்கத்தவர்கள் சபை ஆரம்பித்தால் கிறிஸ்துவின் பெயரில் மட்டுந்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு மத்தேயு 16:18 வசனத்தை உதாரணம் காட்டுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்பதை விளக்குவீர்களா? – இம்மானுவேல் எலியாஸ், தமிழ் நாடு.
பதில்: இந்த சபைப் பிரிவு பற்றியோ அதன் கோட்பாடுகள் பற்றியோ எனக்கு அதிகம் தெரியாது. ஓரளவுக்கு மட்டுமே இதைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதே பெயரில் மேலை நாடுகளில் ஒரு சபைப் பிரிவு இருக்கிறது. ஆனால், அது ‘லிபரல்’ கோட்பாட்டைப் பின்பற்றும் பிரிவாகும்.