கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்

கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்

(The Death of Death in the Death of Christ by John Owen)

ஜெரமி வோக்கர் (Jeremy Walker)

“வாசகர்களே! நீங்கள் தொடர்ந்து இந்நூலை வாசிக்கும் எண்ணத் தைக் கொண்டிருந்தால், சிறிது நேரத்தைக் கொடுத்து இதை வாசிக்கும்படி தயவாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். ஒரு நாடக அரங்கில் நுழைந்துவிட்டு உடனே வெளியேறிவிடுகிறவரைப் போல இந்நூலின் தலைப்பை மட்டும் வேகமாய் வாசித்துவிட்டுப் போகிறவராக இருந்தால், இதை நீங்கள் வாசிப்பதில் பயனில்லை. போய் வாருங்கள்! இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் மிகமுக்கிய மான போதனைகளில் ஆர்வமுடையவர்களுக்கும், கிறிஸ்தவ சிந்தனைகளின் மூலம் ஆத்மீகத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள வும், இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் அரும் போதனைகளின் மூலம் பயனடையவும் விரும்புகிறவர்களுக்கு நான் ஒரு சில வார்த்தைகளை ஆரம்பத்திலேயே முன்வைக்க விரும்புகிறேன்.”

“கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” எனும் நூலில் ஜோண் ஓவன் மேல்வரும் வார்த்தைகளையே வாசகர்களுக்கு ஆரம்ப உரையாக அளித்து நூலை எழுத்தியிருக்கிறார். அசட்டையாக நூலை வாசிக்க முற்படும் வாசகனை இந்த வார்த்தைகள் சுண்டி இழுக்காது. அவ்வாறு அவனை சுண்டி இழுப்பதற்காக ஓவன் இந்த வார்த்தைகளை அவன் முன் வைக்கவில்லை. தான் வாசகனுக்கு முன் படைக்கும் விஷயத்தின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருந்த ஓவன் உடனடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுகிறார். தன்னுடைய நூலில் கையாளப்பட்டிருக்கும் விஷயம் அதிமுக்கியமானது என்பதால் அவர் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது நூலை வாசிக்கும் வாசகனும் அந்த நோக்கத்தோடேயே நூலை அணுக வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். கவனத்தோடு சிந்தனையைப் பயன்படுத்தி வாசிக்கிறவர்கள் ஓவனின் நூலின் மூலம் பெரும் பயனடைவார்கள்.

Continue reading