இப்போது நாம் பார்க்கப்போகிற உண்மை நம்மைத் தாழ்மைப்படுத்துகிறதும், ஆத்மீக ரீதியில் பாதிக்கக்கூடியதொன்றாகும். தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையில் கிருபையின் அன்பு பெருமளவுக்கு தணிந்துபோகக்கூடியதாக இருக்கிறது என்பதே அந்த உண்மையாகும். இதன் மூலம் தேவனுடைய பிள்ளை தன்னுடைய இரட்சிப்பை இழந்துபோகலாம் என்று நான் கூறவரவில்லை; ஆனால், அதன் வல்லமை அவனில் தணிந்துபோகும் என்றுதான் சொல்ல வருகிறேன். இந்த உண்மையை நாம் அடிக்கடி வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். விசுவாசம், அன்பு, நம்பிக்கை, பக்தி என்பனவெல்லாம் தேவனுடைய பிள்ளை துன்பத்தை அனுபவிக்கின்றபோது பெரும் பாதிப்புக்குள்ளாகி வலிமையிழந்து காணப்பட்டாலும் அவற்றை அவன் பூரணமாக ஒருபோதும் இழந்துவிட முடியாது என்று வேதம் சுட்டிக் காட்டுகிறது. அவற்றை அவன் முற்றாக இழந்துவிடலாம் என்று கூறுவது தேவனுடைய வல்லமையையும், ஞானத்தையும் குறைவுபடுத்துவதோடு, அந்தக் கிருபைகளின் அழியாத்தன்மையையும் மறுதலிப்பதில் போய் முடிந்துவிடும். தேவனுடைய அன்பு ஒருவரில் தணிந்துபோகும்போது கீழ்வரும் குணா தியங்களை அவருடைய வாழ்க்கையில் காணமுடியும்.