வில்லியம் பிளமர் (1802-1880)
கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்வாங்கிப் போவதை நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. அப்படிப் பின்வாங்கிப் போவது என்பது நிதர்சனமான உண்மை. அநேகர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதும், கர்த்தருக்கு எதிராகப் போவதும் வெகு சாதாரணமானதொன்றாக அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதை அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் வெளிப்படுத்துகின்றன. கர்த்தருக்கு எதிராக இருந்துவிடப்போகிறோமே என்ற பயம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பயம் அவர்களைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. சிறு பாவமும் நமது சிந்தனையில் உருவாகிவிட்டால் அதைத் தொலைத்து விடுவதற்கு நாம் முயற்சி எடுக்காவிட்டால் நாம் பெரிய ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். கர்த்தரை விட்டு விலகிப்போவது இருட்டை நோக்கிப் போவதுபோலாகும்.