வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்திலும் தீர்மானங்கள் எடுப்பதில் ஆண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டியது விசுவாசிகளின் கடமை. கர்த்தரின் சித்தப்படி நாம் எந்தவொரு விஷயத்திலும் தீர்மானம் எடுக்க வேண்டும். தீர்மானம் எடுப்பதென்பது இலகுவான காரியம் என்று நான் சொல்லவரவில்லை. அது சில வேளைகளில் சிக்கலானதாக இருந்தாலுங்கூட வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் கர்த்தரின் சித்தப்படி செய்வதற்காக சரியான தீர்மானங்களை எடுப்பது அவசியம். சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் நமது வாழ்க்கையில் பல தவறுகளை நாம் செய்துவிடுவோம்; அத்தோடு கர்த்தரின் வழிப்படி நடக்காமல் போய்விடுவோம்; அதன் காரணமாக ஆத்மீகம் நம் வாழ்க்கையில் குறைந்து உலகரீதியில் சமுதாயத்துக்குப் பயந்து வாழ ஆரம்பித்துவிடுவோம். விசுவாசிகள் மத்தியில் இந்த விஷயத்தில் தவறு செய்கிற மூன்றுவித மனிதர்களைப் பார்க்கலாம்: