திருச்சபை வரலாறு

நெதர்லாந்தில் சீர்திருத்தம்

நெதர்லாந்தை (Netherlands) ஒல்லாந்து (Holland) என்ற பெயரிலும் அழைப்பார்கள். ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு சத்தியம் பரவி திருச்சபை சீர்திருத்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனி ஆராய்வோம். ஜெர்மனியில் கர்த்தர் லூதரின் மூலம் ஏற்படுத்திய திருச்சபை சீர்திருத்தம் தொடர்ந்து ஐரோப்பா எங்கும் பரவ ஆரம்பித்திருந்தது. பிரான்சில் அது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைக் கடந்த இதழில் கவனித்தோம். நெதர்லாந்து கடலுயரத்தைவிட தாழ்ந்திருந்த நாடு. மூன்று மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அந்நாடு கடல் நீர் உள்ளே வருவதைத் தடுப்பதற்காக பெரும் சிரமத்துடன் கடற்கரைப் பகுதிகளில் தடுப்புச் சுவரெழுப்பி கடற்பரப்பை நன்நிலமாக்கி தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்தினர். நிச்சயமாக அவர்களுக்கு நிலத்தின் அருமை தெரிந்திருந்தது. தங்கள் நாட்டிற்கு சமுத்திரத்தால் உண்டாகக்கூடிய ஆபத்தும் தெரிந்திருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்தில் வாழ்கிறவர்களுக்கு கடவுளின் அருமை தெரியும். படைத்தவர் தங்களைக் காப்பாற்றாவிட்டால் கூண்டோடு அழிந்துவிடுவோம் என்பதை இந்த மக்கள் ஓரளவு உணர்ந்திருந்தார்கள். சமுத்திரத்திடம் போராடி நிலத்தைப் பெற்று அதைப் பாதுகாத்து வாழ்ந்து வருவதால் இவர்களிடம் நாட்டுப்பற்றும் அதிகமாயிருந்தது. உழைப்பின் அருமையையும் இந்த மக்கள் உணர்ந்தவர்களாயிருந்தார்கள். இக்காலப்பகுதியில் ரோமன் கத்தோலிக்க மதம் இங்கே தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சியின் தாக்கமும் நாட்டு மக்களை அதிகம் சிந்திக்க வைத்தது. மறுமலர்ச்சிக் காலத்தின் தலைசிறந்த அறிஞராக இருந்த இராஸ்மஸ் நெதர்லாந்தின் ரொட்டர்டேமைச் (Rotterdam) சேர்ந்தவராக இருந்தார்.

Continue reading