இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை? – அல்பர்ட் என். மார்டின் –

யூதர்களின் பண்டிகை நாளொன்றில் எருசலேம் மிகவும் கலகலப்பாக இருந்தது. பெதஸ்தா குளத்தின் பக்கத்தில் கலிலேயாவிலிருந்து வந்த அந்த இளம் ரபி, 38 வருஷமாக திமிர்வாதம் பிடித்திருந்த ஒரு மனிதனை நொடிப்பொழுதில் குணமாக்கியிருந்தார். அதைப் பார்த்து சுற்றியிருந்த கூட்டத்தார் பிரமிப்படைந்திருந்தனர். அதைக் குறித்து சந்தோஷப்படுவதற்கு பதிலாக, யூதமதத் தலைவர்கள், அந்த திமிர்வாதக்காரனை நோக்கி, ஓய்வுநாளிலே நீ ஏன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கிறாய் என்று குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அது வேலையாக இருந்தது. ஓய்வுநாளில் அவன் வேலை செய்யக்கூடாது என்பது அவர்களுடைய கொள்கை. அத்தோடு அவர்கள் இயேசு கிறிஸ்து மீதும் குற்றஞ்சாட்டினார்கள். திமிர்வாதக்காரனை சுகப்படுத்திய “வேலையை” அவரும் ஓய்வுநாளில் செய்தார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. அதற்கு இயேசு, “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட அவர்களுக்கு, “அவர் தம்மை தேவனுக்கு சமமாக்கிவிட்டார்” என்ற கோபம் வந்ததே தவிர வேறொன்றும் தோன்றவில்லை (யோவான் 5:18).

Continue reading