காலத்தால் அழியாத கர்த்தரின் கட்டளைகள் – 21ம் நூற்றாண்டுக்கு இன்றியமையா கட்டளைகள்

ஒரு காலத்தில் மேலை நாடுகளிலும் கீழைத் தேசங்களிலும் கடவுளின் பத்துக்கட்டளைகளுக்கு அதிக மரியாதையும் மதிப்பும் அளிக்கப்பட்டது. பத்துக்கட்டளைகளை மரப்பலகைகளிலோ அல்லது தகடுகளிலோ பெரிதாக எழுதி பொதுவாக சபையின் சுவர்களில் வைத்திருப்பார்கள். பத்துக்கட்டளைகளை ஓய்வு நாள் சிறுவர் பாடசாலைகளில் தவறாது சொல்லிக்கொடுப்பார்கள். சபை ஆராதனைகளிலும் அதை ஒவ்வொரு ஓய்வு நாளிலும் வாசிப்பார்கள். இன்றும் சில சமயப்பிரிவுகளில் அதை வாசிக்கும் வழக்கம் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் பத்துக்கட்டளைகளை சடங்கைப்போல எண்ணிப் பயன்படுத்தி வந்ததல்ல. பத்துக்கட்டளைகளின் உண்மைத் தன்மையை அவர்கள் அறிந்தும் உணர்ந்தும் வைத்திருந்ததுதான்.

இருந்தாலும் அன்றிருந்ததுபோல் இன்றைக்கு வெளிப்படையாக இந்தளவுக்கு பத்துக்கட்டளைகளில் மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பத்துக்கட்டளைகள் நல்ல கட்டளைகள்தான், அவை அவசியந்தான், நல்ல போதனைகளையும் அவை தருகின்றன என்றெல்லாம் கிறிஸ்தவர்கள் நிச்சயம் அவற்றைப் பாராட்டிப் பேசினாலும், பத்துக்கட்டளைகளின்படி நிச்சயம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ வேண்டும் என்று சொல்லுகிற கூட்டம் வெகுவேகமாக குறைந்து வந்திருக்கின்றது. பத்துக்கட்டளைகளை சாதாரணமாக வெளிப்படையாக விளக்கிப் போதிக்கும் வழிமுறை சபைகளில் மாறி அது ஏன் அவசியம் என்று விளக்கிச் சொல்லி கிறிஸ்தவர்களை நம்ப வைக்கவேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை தோன்றியிருக்கின்றது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பத்துக்கட்டளைகள் மியூசியத்தில் வைக்கப்படும் பொருளின் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமலில்லை.

Continue reading