பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6
8. உங்களுடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கும்படி பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுங்கள்
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லுவதை அவர்கள் நம்பும்படியாகக் கற்றுக்கொடுங்கள். தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும், ஆராய்ந்தறியும் திறனையும் காட்டிலும் பெற்றோராகிய உங்களுடைய கருத்துக்களும் அறிவும்தான் மேலானது என்கிற நம்பிக்கை அவர்களுக்கு உருவாகும்படியாக செய்ய வேண்டும். நீங்கள், அவர்களுக்கு நல்லதல்ல என்று குறிப்பிடும் காரியங்கள் நல்லதல்ல என்றும், நீங்கள் சரியென்று சொல்வது சரியாகத்தான் இருக்குமென்றும் அவர்கள் நம்பும்படியாக அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். சுருக்கமாகக் கூறினால், உங்களுடைய அறிவு அவர்களுடையதை விட மேலானதென்றும், நீங்கள் எதையாவது கூறினால் அதற்கு அவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் அவர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். நீங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கிறவைகள் இப்போது அவர்களுக்கு சரியாக விளங்காவிட்டாலும் எதிர்காலத்தில் அவர்கள் விளங்கிக்கொள்வார்களென்றும், இப்போதைக்கு நீங்கள் சொல்கிறபடி கேட்டு நடந்தால் போதுமானது என்றும் அவர்கள் உணர்ந்துகொள்ளும்படியாகச் செய்யுங்கள்.