75வது இதழ் வாசகர்கள் சொன்னவை!

Prabudossதிருமறைத்தீபம் பத்திரிக்கை 75 வது இதழாக வெளிவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் தடையில்லாமல் வெளிவர உதவிசெய்து இப்பிரதிகள் எனக்கும் கிடைக்க உதவிய ஆண்டவருக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி ஏறெடுக்கிறேன்! இவ்வூழியம் என் வாழ்க்கையில் கொண்டு வந்த நன்மைகளை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது!

எத்தனை எத்தனை சத்தியங்கள், எவ்வளவு பெரிய வெளிப்பாடுகள்! கற்றுக்கொண்ட காரியங்கள் எத்தனையோ!! அவைகள் அத்தனையையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பல ஆண்டுகளாய் வேதாகம கல்லூரியில் பயின்ற மாணவனை போன்ற ஓர் உணர்வு எனக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.

‘திருமறைத்தீபம்’ வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்த நாட்கள் அந்நாட்கள். பத்திரிக்கை கையில் கிடைத்த நிமிடத்திலிருந்து, அதை வாசித்து முடித்துவிட்ட பிறகே மற்ற வேலையைப் பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு பிரதியும் உள்ளத்தில் அனல்மூட்டிக்கொண்டிருந்தது. பாடப் புத்தகத்தோடு சேர்த்து திருமறைத்தீபத்தையும் எடுத்துச் சென்று பள்ளி நாட்களை கழித்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் ரயில் பயணத்தில் படிப்பதற்கு ஒவ்வொரு பிரதிகளையும் கொண்டுசெல்வது என் வழக்கமாகவே இருந்திருக்கிறது. அது என் சக தோழர்களுக்கும் இந்த பழக்கத்தை உண்டாக்கியது. இப்படியாக இன்றுவரைக்கும் என் ஆத்மீகப் பசிக்கு உணவளிக்கும் வல்லமையுள்ளதாய் இருந்து கொண்டு தான் இருக்கின்றது இத்தீபம்!

 

Continue reading