கிருபாதாரபலியா, கோபநிவாரணபலியா?

வார்த்தைகள் முக்கியமானவை. நம்முடைய எண்ணங்களை வெளியிட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். எண்ணங்களைத் தெளிவாக விளக்குவதற்கு தகுந்த வார்த்தைகள் அவசியம். வார்த்தைகள் சரியானதாக இல்லாவிட்டால் நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் தவறான கருத்தைக் கொடுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. தகுந்த வார்த்தைகளை, நாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களுக்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அவசியத்தை பொதுவாக எல்லோரும் அறிந்திருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் இந்தளவுக்கு மொழியைப் பொறுத்தவரையில் நாம் வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறபோது, நாமறிந்துகொள்ளும்படி தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கும் தன்னுடைய வேதத்தில் கர்த்தர் எந்தளவுக்கு முக்கியம் கொடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பார்? தம்முடைய சித்தம் தெளிவாக, நாம் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டுமென்பதற்காக நிச்சயம் கவனத்தோடு தெரிந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். அதுவும் வேதம் பரிசுத்த ஆவியினால் விசேஷமான முறையில் ஊதி அருளப்பட்டதாக இருக்கிறது. வேதத்தை எழுதி முடிக்க தேவ மனிதர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியிருந்தபோதும், தவறு அறவேயில்லாமல் அவர்கள் வேதத்தை எழுதும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியானவர் பூரணபரிசுத்தராக இருப்பதால் அவருடைய எழுத்துக்களும் பூரணபரிசுத்தம் வாய்ந்ததாகவே இருக்கும். வேதத்தில் அது போதிக்கும் சத்தியங்கள் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் மொழியும், வார்த்தைகளும்கூட பூரணமானவையாகக் காணப்படுகின்றன. அதாவது. வேதம் எபிரெய, கிரேக்க மொழிகளில் எழுதித் தரப்பட்டு காணப்படும் மூலச் சுருள்களில் அந்தவகையில் கர்த்தரின் வேதம் பூரணமானதாகக் காணப்படுகின்றது. இந்த மூலச் சுருள்களில் இருந்தே வேதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நம்மை வந்தடைந்திருக்கிறது.

Continue reading