மரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு –

john-knox (1)இந்த வருடம் ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தவாதியான ஜோன் நொக்ஸின் (1514-1572) 500வது நினைவாண்டு. வரலாற்று முக்கியத்துவம் கொண்டவர்களை நினைத்துப் பார்ப்பது உலக வழக்கம். கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் கர்த்தர் பயன்படுத்தியுள்ள சிறப்பான மனிதர்களை நினைத்துப் பார்ப்பது நமது வரலாற்றையும் அதன் முக்கிய அம்சங்களையும் மறந்துவிடாமல் நினைவுபடுத்தி கர்த்தருக்கு நன்றிகூறவும், அவர்கள் தியாகத்தோடு உழைத்த சத்தியங்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபடவும் உதவும். அத்தோடு, எபிரெயர் 11:4 விளக்குவதுபோல் இந்தப் பெரிய மனிதர்கள் மரணத்தை சந்தித்தபோதும் தங்களுடைய வாழ்க்கைச் சாதனைகளின் மூலம் இன்றும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர், அதிரடிப் பிரசங்கி, அஞ்சாநெஞ்சன், ‘ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தத் தந்தை’ என்றெல்லாம் பெயர்பெற்றிருக்கும் ஜோன் நொக்ஸைப் பற்றி திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கடந்த வருடம் வெளிவந்த திருச்சபை வரலாறு, பாகம் 2லும் அவரைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறேன். திருச்சபை வரலாற்று நாயகர்களில் எனக்குப் பிடித்தவர்களில் முக்கியமானவர் ஜோன் நொக்ஸ். அவரை நினைத்துப் பார்க்கும்போது உடனடியாக மனதில் நிற்பது அவருடைய அஞ்சாநெஞ்சந்தான். பயமே அறியாதவர் அவர். ஸ்கொட்லாந்து தேச ராணி மேரி ஸ்டுவர்ட் முன் நின்று சபையில் அவர் பிரசங்கம் செய்கிற ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் பிரசங்க மேடையில் கண்களில் தீப்பொறி பறக்க நின்று ராணியை நோக்கிக் கையை நீட்டி ஜோன் நொக்ஸ் பிரசங்கிக்கும் காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. அக்காலத்தில் அரசி மந்திரிகளோடு ஓய்வுநாளில் சபைக்குப் போவது வழக்கம். ராணி மேரி ரோமன் கத்தோலிக்க மத ஆதரவாளி. இதுதான் கிடைத்த சமயம் என்று நொக்ஸ் அவளுக்கு வைராக்கியத்தோடு கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார். ராணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் சபையில் அவரை ஒன்றும் செய்ய முடியாததால் பேசாமல் இருந்துவிடுவாள். பின்னால் அவரைக் கைதுசெய்ய அவள் பெருமுயற்சி எடுக்காமலில்லை. ஜோன் நொக்ஸ் எப்படியும் அவளுடைய கையில் பிடிபடாமல் உயிர்தப்பி வாழ்ந்திருக்கிறார். இங்கிலாந்தின் படைகளைவிட ஜோன் நொக்ஸின் பிரசங்கத்திற்கும், ஜெபத்திற்கும் ராணி மேரி ஸ்டுவர்ட் பயப்பட்டாள் என்று அன்று பேசப்பட்டது.

 

Continue reading