நிழல் நிஜமாகப் பார்க்கிறது

தலைசிறந்த பிரசங்கியான சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் அருமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். ‘உண்மையைப் போலியானதிலிருந்து பிரித்துக்காட்டும் சாதாரண விஷயமல்ல பகுத்தறிவு என்பது; உண்மையை உண்மையைப்போலத் தோற்றமளிப்பதிலிருந்து பிரித்துக்காட்டுவதே பகுத்தறிவு.’ இது எத்தனை சத்தியமான வார்த்தை என்பதை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நிதர்சனமாய்ப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் தவறு எது, உண்மையெது என்று அறிந்துகொள்ளுவது அத்தனை கடினமான காரியமாக இருக்கவில்லை. பொதுவாகவே அந்த விஷயத்தில் மக்களுக்கு அதிகம் பிரச்சனை இல்லாமலிருந்தது. இன்றைக்கு அதுவே இமாலயப் பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. தவற்றைத் தவறென்று சொல்லுவது தவறு என்கிறது பின்நவீனத்துவ சமுதாயம். கிறிஸ்தவ சமுதாயமும் அந்த சிந்தனைப் போக்கைக் கொண்ட கலாச்சாரத்தைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது. தவற்றைத் தவறாகப் பார்க்கும் காலம் போய், அதோடு சேர்ந்து வாழ வற்புறுத்துகிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம். அதுதான் உண்மையான ஒற்றுமையாம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் உண்மை, உண்மையைப்போல் தோற்றமளிப்பதோடு ஒருங்கிணைந்து வாழ்வதுதான் யதார்த்தம் என்கிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம்.

Continue reading