தேவ கோபம்

இந்த வருடத்தில் வெளிவந்த இரண்டாவது இதழில் ‘கிருபாதார பலியா, கோபநிவாரண பலியா?’ என்ற ஆக்கத்தில் அதன் இறுதிப் பகுதியில் தேவ கோபத்தைப் பற்றி விளக்கியிருந்தேன். மனிதர் மேலிருக்கும் கர்த்தரின் கோபத்தை நீக்கி அவர்களுக்கு பாவநிவாரணமளிப்பதற்காகவே இயேசு கல்வாரியில் மரித்தார். கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலம் மனந்திரும்புகிற பாவிகளின் மேலிருக்கும் தேவ கோபம் நீக்கப்படுகிறது என்ற கிரேக்க மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையில் காணப்படும் சத்தியத்தைத் தமிழ்வேத மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘கிருபாதார பலி’ என்ற பதம் விளக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதற்கு மாற்றுப் பதமாக ‘கோபநிவாரண பலி’ என்ற பதம் பொருத்தமானதாக இருக்கும் என்று விளக்கியிருந்தேன். தேவன் பாவிகள் மீது கோபத்தோடு இருக்கிறார் என்ற வேத உண்மையை மறுதலிக்கிற அநேகர் இருக்கிறார்கள். ஆகவே தேவ கோபத்தைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்காமல் இருக்க முடியாது.

Continue reading