சிற்றெறும்பும் கட்டெறும்பும்

antகடவுள் தன் பணியில் தனக்கு இஷ்டமானவிதத்தில் தன்னுடைய சித்தப்படி அநேகரைப் பயன்படுத்திக்கொள்ளுகிறார். அது அவருடைய இறையாண்மையைப் பொறுத்தது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் வாசிக்கும் அநேக தேவ ஊழியர்களை அந்தவிதத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறார். அவர் குயவன்; அவரால் அழைக்கப்பட்டு அவருக்குப் பணிசெய்கிறவர்கள் அவருடைய கையில் இருக்கும் மட்பாண்டங்கள். என்னை ஏன் தெரிவுசெய்தீர்கள்? அல்லது தெரிவுசெய்யவில்லை என்றெல்லாம் ஒருவரும் கடவுளைக் கேட்க முடியாது. எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கடவுள் தம் சித்தப்படி, தம்முடைய மகிமைக்காக எவரையும் பயன்படுத்துகிறார்; அனைத்தையும் செய்து வருகிறார்.

கடவுளின் பணியில் மோசமானது, ‘நான்’ என்ற ஆணவம். இந்த ‘நான்’ என்ற ஆழமான வடுவை நீக்குவதே ஆவியின் மறுபிறப்பாகிய அனுபவம். இருந்தும் ஆவியில் பிறந்தவர்கள் மத்தியிலும் இந்த ‘நான்’ தலைதூக்கி விடுகிறது. மரணத்திற்குரிய சரீரத்தோடு வாழ்கின்ற நாம் அதைப்பற்றி ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. இருந்தாலும் ஆவியில் பிறந்திருப்பவர்கள் இதை அடையாளம் கண்டு அன்றாடம் அழித்து இருதயத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இதைப்போலத் தொல்லை கொடுப்பது வேறொன்றுமிருக்கமுடியாது. இது ஒரு பெருங்காட்டை அழித்துவிடும் பெருநெருப்பு. நாட்டையே நாசமாக்கிவிடும் நச்சுப்பாம்பு. திருச்சபையை இடுகாடாக மாற்றிவிடும் கொடூரமான, சாத்தானுக்குப் பணிசெய்யும் ஊழியக்காரன் இந்த ‘நான்.’

Continue reading