பெருமறையில் இருக்கும் எல்லாக் காரியங்களையும் சிறு அறிவு படைத்த எம்மால் புரிந்திட முடியுமோ? இல்லையே. அதை புரிய வைக்கும் பணியை திருமறை செவ்வனே செய்கிறது. இன்னுமொரு முக்கிய விடயம் யாதெனில், நாம் வேதத்தை அனுதினம் வாசித்தாலும், வேதத்தைப்பற்றிய வேதத்திற்குப் புறம்பான அநேக தகவல்கள் நாம் வாசிக்கும் வேதத்தினூடாக கிடைக்கப் பெறுவதில்லை. உதாரணமாக தமிழ் வேத மொழிபெயர்ப்பு யாரால், எப்போது, எங்கு செய்யப்பட்டது என்ற விடயத்தைக் குறிப்பிடலாம். ஒரு கிறிஸ்தவன் இந்த தகவல்களை அறிந்து வைத்திருத்தல் மிக அத்தியாவசியமானதொன்றே. இதுபோல இன்னும் பலவுள. இப்படியான கிறிஸ்தவர்கள் அறிய வேன்டிய முக்கியமான தகவற் திரட்டுக்களை, போதகர் திரு பாலா அவர்கள் ஊடாக வெளிவரும் திருமறைத்தீபம் ஏந்தி வருகின்றது. திருமறைத்தீபத்தின் அட்டைப்படம் மனதைக் கவர்வதோடு, அதுவும் ஒருவித செய்தியைச் சுட்டும். அவ்வப்போது தலை காட்டும் கவிதைகள் இனியவை. தமிழ்க் கிறிஸ்தவர்கள் அநேகர் தெரிந்திராத தகவல்கள் மேல்நாட்டுக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படியான அருந்தகவல்களையும் போதகர் திரு பாலா அவர்கள் தேடி எடுத்து, நமக்கான தமிழ்ச்சுவையில் தந்துவிடுகின்றார்.
