“பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு”
– வால்டர் ஜெயபாலன்
சமீபத்தில் தமிழகம் போயிருந்தபோது வால்டர் ஜெயபாலன் எழுதி இம்மானுவேல் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருந்த ‘பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு’ எனும் நூலை வாங்கினேன். வேத மொழிபெயர்ப்பு பற்றி தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த சில நூல்களை வாசித்திருக்கிறேன். சபாபதி குலேந்திரனுடைய நூல் இந்நூல்களுக்கெல்லாம் தமிழில் ஆரம்ப நூலாக இருந்திருக்கிறது. வேத மொழிபெயர்ப்புபற்றி இக்காலத்தில் நான் அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பதால் இந்நூலில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் வாசித்தேன். பெங்களூர் ஈ. எல். எஸ். விற்பனையகத்தில் நூல் கிடைத்தது.