நம்மிடம் இல்லாதது: கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம்

பல ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ லங்காவிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிந்துவிட்டு நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து வாழவந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஓரளவுக்குப் பழக்கமேற்பட்ட பிறகு சில விருந்துகளில் அவரைச் சந்தித்தவேளை பலவிஷயங்கள்பற்றிப் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் தன்னை கிறிஸ்தவராகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். பேச்சு எங்கள் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள்பற்றித் திரும்பியது. என்னுடைய பிள்ளைகள் அரசு கல்லூரிகளுக்குப் போகவில்லை என்றும், கிறிஸ்தவ கல்லூரியொன்றுக்குப் போவதாகவும் சொன்னேன். அதற்கு அவர் காரணம் கேட்டபோது நாட்டில் அரசு பள்ளிக்கூடங்கள் நடந்துவரும் முறைபற்றியும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகங்கள்பற்றியும் சாதாரணமாகத்தான் விளக்கினேன். அந்த நண்பருக்கு முகம் மாறிவிட்டது. அரசுபள்ளிக்கூடங்களைப்பற்றி உயர்வாகப்பேச ஆரம்பித்தார். பேச்சு சரியான திசையில் போகவில்லை என்பதை உணர்ந்து அத்தோடு நிறுத்திக்கொண்டேன். அவரும் அதற்குப் பிறகு என்னை மார்ஸ் கிரகத்தில் இருந்து வந்திருப்பவனைப்போல உற்றுப்பார்ப்பதாக எனக்குத் தோன்றியது. இதை நான் எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு உலகக் கண்ணோட்டம் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் இல்லாத பெரிய குறையை உணர்ந்து வருந்துகிறேன். இதைக் கொஞ்சம் நான் விளக்கித்தான் ஆகவேண்டும்.

Continue reading