[இந்த ஆக்கத்தை எழுதியவரை டே. மெ என்ற அவருடைய பெயரின் ஆரம்ப எழுத்துக்களின் மூலம் மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அருமை நண்பரான டே. மே அவர்களின் கர்த்தருக்கான விசேஷ ஊழியப்பணிகள் அவருடைய பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட முடியாதபடி செய்கின்றன; இதை அவரே கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆங்கில மூலத்தில் இருந்து தமிழாக்கம் செய்தவர் நண்பர் ஜேம்ஸ். இந்த ஆக்கத்தில் உள்ள வேத வசனங்கள் இந்திய வேதாகம இலக்கியம் (IBL) வெளியிட்டுள்ள புதிய மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. – ஆசிரியர்]
கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றும் ஆதாரமும்.
தீத்து. 2:13-14 – நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மேன்மையான தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குக் கற்பிக்கிறது. அவர் நம்மைச் சகல தீமைகளிலிருந்தும் மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்கும்படி, தமக்கென நம்மைத் தூய்மையாக்குவதற்காக, தம்மைத்தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார்.