நிழலும் நிஜமும் – பழையஏற்பாட்டு பலிகளும், கிறிஸ்துவின் பாவநிவாரணபலியும் –

[பேராசிரியர் ஜோன் மரே ‘மீட்பின் நிறைவேற்றம்’ என்ற ஆங்கில ஆக்கத்தில் விளக்கியிருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய ஆழமான சத்தியங்களை எளிமையாக தொடர்ச்சியாக விளக்கப்போகிறேன். அதுபற்றிய இரண்டு ஆக்கங்கள் கடந்த இதழில் வந்திருந்தன. இது அவற்றின் தொடர்ச்சி. – ஆசிரியர்].

கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் தன்மையை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் அந்தப்பலியில் அடங்கியுள்ள அத்தனை உண்மைகளையும் விளக்கும் ஒரே வார்த்தையாக கிறிஸ்துவின் கீழ்ப்படிவு அமைந்திருப்பதாகக் கண்டோம். அவருடைய முழுமையான கீழ்ப்படிதல் பாவநிவாரணபலியைப் பூரணமாக நிறைவேற்றியிருக்கிறது. இருந்தபோதும் வேதத்தில் கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை விளக்கும் வேறு தனிப்பட்ட பதங்களும் காணப்படுகின்றன. இந்தப் பதங்கள் ஒவ்வொன்றும் பாவநிவாரணபலியின் விசேட தன்மைகளை பிரித்துக்காட்டுவனவாகவும், அதேநேரம் பாவநிவாரணபலிபற்றிய முழுமையான புரிதலை நாம் அடையும்படியாகவும் உதவுகின்றன. பாவநிவாரணபலி பற்றி நாம் இந்தளவுக்கு சாதாரணமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. வேதம் அதுபற்றி விளக்கும் உண்மைகளை அறிந்துகொள்ளுகிறபோதுதான் கிறிஸ்துவின் பலி எத்தனை மகத்தானது என்பதையும், அவர் நமக்களித்திருக்கிற இரட்சிப்பு எத்தனை மேன்மையானது என்பதையும் நாம் அறிந்துணர முடிகிறது. அறிவுக்காக மட்டுமல்லாமல் நாம் கிறிஸ்துவுக்குள்ளாக பரிசுத்தத்தில் உணர்வுபூர்வமாக நடைமுறையில் வளருவதற்கும் பேருதவியாக இருக்கும் பெருஞ்சத்தியங்கள் இவை.

Continue reading