வேதம் விளக்கும் தேவபயம் – அல்பர்ட் என். மார்டின்

[அல்பர்ட். என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் தேவபயம் (Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம்.]

வேதாகமத்தில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது தேவபயம். நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்களின் சிந்தனைகளிலும் பிரசங்கங்களிலும் இந்த விஷயமே அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. ஒருவன் மெய்யான தேவபக்தியுள்ளவன் என்பதை விளக்குவதற்கு, நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்கள் “கடவுளுக்கு பயப்படும் மனிதன்” என்றே அவனைப் பெரும்பாலும் அழைத்தார்கள். இந்தப்பதம் எதைப் பிரதிபலிக்கிறதென்றால், தேவபயமுள்ள எந்தவொரு மனிதனும் தன் ஆத்துமாவின் தேவபக்தியை வெளிப்படுத்துவது தேவபயம் என்பதை உணர்ந்தவனாக இருப்பதைத்தான். சரீரத்திலிருந்து ஆவியை எடுத்துவிட்டால், கொஞ்ச நாட்களில் மிஞ்சுவது வெறும் நாற்றமெடுக்கும் பிணமே. தேவபக்தியிலிருந்து தேவபயத்தை எடுத்துவிட்டால், பரிசேயத்தனமும், வெறும் மதமும், மாய்மாலமுந்தான் நாற்றமெடுக்கும் பிணத்தைப் போல மிஞ்சும்.

Continue reading