தேவபயம்: சொற்பொருள் விளக்கம்

தேவபயம்: சொற்பொருள் விளக்கம்

(வேதம் போதிக்கும் தேவபயம் – 2)

– அல்பர்ட் என். மார்டின் –

[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]

“தேவபக்தியின் உயிர்நாடியாக இருப்பது தேவபயம்” என்று ஜோன் மரே சொல்லியிருக்கிறார். பரிசுத்த வேதாகமத்தில் எங்கும் பரவலாக ஆதிக்கம் செலுத்தும் தேவபயம் இந்தத் தலைமுறையில் பொதுவில் அநேகரிடத்தில் இல்லாமல் போய்விட்டதை கவனத்தோடு வாழும் கிறிஸ்தவர்களால் கவனிக்காமல் இருக்க முடியாது. தேவபயத்தைப் பற்றி வேதப்போதனைகளிலுள்ள முக்கியமான உண்மைகளில் சிலவற்றையாவது நாம் அறிந்துகொள்ளுவதற்கான முயற்சியாக, இந்நூலின் முதலாவது அதிகாரத்தில், வேதாகமத்திலுள்ள தேவபயத்தின் ஆதிக்கத்தைப் பற்றி அறியவும் உணரவும் செய்தோம்.

இப்போது, தேவபயம் என்ற வார்த்தைக்கு வேதம் கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம். இதன் மூலம் வேதம் தேவபயத்தை எந்தளவு வலியுறுத்துகிறது என்பதைக் கவனிக்கலாம். அத்தோடு தேவபயத்தைப் பற்றிய விஷயத்தில் வேதம் எதை வலியுறுத்துகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். வேதாகமம் குறிப்பிடுகிற தேவபயத்தின் விளக்கத்தை எப்படி நாம் கண்டறிவது? வேதத்தில் ஆண்டவர் தேவபயத்தில் வருகிற “பயம்” என்ற வார்த்தையைக் குறிப்பிடுவதற்கு இரண்டு எபிரெய வார்த்தைகளையும் ஒரு கிரேக்க வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே, வேதத்தில் பயம் என்ற வார்த்தை பொதுவான விதத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். பிறகு, தேவபயத்தைக் குறிப்பிடுவதற்கு அந்த இரண்டு வார்த்தைகளின் அம்சங்கள் பொதுவான விதத்தில் எப்படி இணைக்கப்பட்டு அதற்கான பொருளைத் தருகிறது என்று பார்ப்போம்.

Continue reading