மார்டின் லூத்தர் சொன்னார், ‘போப்புக்கோ கார்டினலுக்கோ பயப்படுவதைவிட என்னுடைய இருதயத்திற்குத்தான் நான் அதிகம் பயப்படுகிறேன்’ என்று. அதற்குக் காரணம் எல்லாவித அசிங்கங்களும் இருதயத்தில் இருந்து புறப்படுவதால்தான். ‘நம்மில் இருக்கும் பாவம் தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைப் போன்றது. அது அமைதியாய் இருப்பதுபோல் தோன்றினாலும், காய்ந்த சருகுகளுக்கு அடியில் மறைந்திருக்கும் நெருப்பைப்போல் இருந்தாலும் சோதனைகளாகிய காற்று வீசுகின்றபோது அது எத்தனை வேகமாக குபீரென்று எரிந்து மகாமோசமான பாவங்களைச் செய்துவிடுகிறது. அதனால்தான் நாம் எப்போதும் கவனத்தோடு விழித்திருந்து வாழவேண்டும்’ என்று எழுதியிருக்கிறார் பியூரிட்டன் பெரியவர் தொமஸ் வொட்சன்.