தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்

(வேதம் போதிக்கும் தேவபயம் – 3)

– அல்பர்ட் என். மார்டின் –

[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]

கடந்த இரண்டு அதிகாரங்களில், தேவபயமாகிய இந்த மையப் போதனை வேதத்தில் எங்கும் பரவிக் காணப்படுவதைப் பற்றியும், இது சம்பந்தமாக வேதத்திலுள்ள உதாரணங்கள் மற்றும் சொற்பொருள் விளக்கத்தையும் பார்த்தோம். இப்போது நாம், தேவபயத்தின் அடிப்படை அம்சங்களைக் கண்டறியப் போகிறோம். தேவபயத்தின் அடிப்படை அம்சங்களாக இருக்கின்ற வேத சத்தியங்கள் விளக்கும் மூன்று பிரிவுகளை இதில் நாம் அடையாளங் காணப்போகிறோம். முதலாவது, கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை நமக்கு இருக்க வேண்டும். இரண்டாவது, கடவுளுடைய பிரசன்னம் எங்கும் படர்ந்து நிறைந்திருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு உணர்வு இருக்க வேண்டும். மூன்றாவது, கடவுளுக்கான நம்முடைய கடமைப் பொறுப்புகளைப் பற்றிய தொடர்ச்சியான ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

Continue reading