அக்டோபர் 31, 1517

தலபான் (Talaban) தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் புத்தமத சமய, வரலாற்றுச் சின்னங்களை சின்னாப்பின்னமாக்கினார்கள். அதையே பின்பு ஐசில் தீவிரவாத குழுவும் சிரியாவில் தான் கைப்பற்றிய இடங்களில் செய்தது. இவர்களெல்லாம் வரலாற்றின் ஒருபகுதி தங்களுடைய சிந்தனாவாதத்திற்கு எதிராக இருப்பதாகக் கருதி அதை அடியோடு இல்லாமலாக்கினால் மக்கள் நினைவிலிருந்து அதை அகற்றிவிடலாம் என்பதற்காகவும், தங்களுடைய சிந்தனாவாதத்தை சமுதாயத்தில் ஆணித்தரமாகப் பதிக்கவும் அதைச் செய்தார்கள். இன்று அமெரிக்காவில் ஒபாமாவின் லிபரல் போக்கைப் பின்பற்றும் சமுதாயத்தில் ஒரு பகுதி கொன்பெடரேட் (Confederate) தலைவர்களின் நினைவுச்சின்னங்களை இல்லாமலாக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதைச் செய்தால் தங்களுடைய குறுகிய கோரமான லிபரல் மனப்பான்மையை சமுதாயத்தில் ஆழப்பதித்து பாரம்பரிய, கன்ஷர்வெட்டிவ் (Conservative) சிந்தனை வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று இவர்கள் கனாக் காண்கிறார்கள். ரொபட் ஈ லீ, சாமுவேல் ஜாக்சன் போன்ற தலைசிறந்த கன்ஷர்வெட்டிவ் கிறிஸ்தவ தலைவர்கள் நினைவுச் சின்னங்களை அகற்றத் துணிந்திருக்கும் இந்தக் குறுகிய நோக்கம் கொண்ட விஷமிகளுக்கு வரலாற்றின் அருமையோ, அதுபோதிக்கும் பாடங்களைப்பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. குறுகிய நோக்கத்தோடு தற்காலத்துக்காகவும், சுயலாபத்துக்காகவும் மட்டுமே அராஜகத்தில் ஈடுபடும் இந்த விஷமிகள் வரலாறு தங்களுடைய நோக்கங்களுக்கும், இச்சைகளுக்கும் ஆபத்தாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.

Continue reading