அன்பு வணக்கங்கள்!
இந்த இதழில் தொடர்ந்து ‘தேவபயம்’ மற்றும் ‘பக்தி வைராக்கியம்’ பற்றிய ஆக்கங்கள் வந்திருக்கின்றன. இவை ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக வாசகர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். தேவபயம் பற்றிய அல்பர்ட் என் மார்டினின் ஆக்கங்கள் இந்த இதழோடு முடிவுக்கு வருகின்றன. கூடிய விரைவில் அது நூலாக வெளிவரவிருக்கிறது.