ஆயிரம் வருட அரசாட்சி

பரலோக இராஜ்யமும், தேவனின் இராஜ்யமும்

அநேக டிஸ்பென்சேஷனலிஸ்ட்டுகள் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அதிகமாக பயன்படுத்தும் ‘பரலோக ராஜ்யம்’ என்ற பதங்களை ‘தேவ இராஜ்யம்’ என்ற பதங்களிலிருந்து வேறுபடுத்தி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில், பரலோக இராஜ்யம் உலகத்தில் இஸ்ரவேலுக்கு கர்த்தர் ஏற்படுத்தியுள்ள திட்டம் என்றும் அதற்கும் திருச்சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இதன்படி மத்தேயுவில் இயேசு அளிக்கும் போதனைகள், மலைப்பிரசங்கம் உட்பட யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகவும் அவற்றிற்கும் விசுவாசிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் இவர்களுடைய முடிவு. ஆனால், இந்தப் போதனைக்கு வேதத்தில் இடமில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வேதம், பரலோக இராஜ்யம், தேவ இராஜ்யம் என்ற வார்த்தைகளை ஒரே பொருளைக் குறிக்கும் வார்த்தைகளாகத்தான் பயன்படுத்துகிறதே தவிர டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் விளக்குவதுபோல் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை யூதர்களைக் கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு எழுதியதால் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பரலோக இராஜ்யம் என்ற வார்த்தைகளைத் தன்னுடைய சுவிசேஷத்தில் அதிகம் பயன்படுத்தியுள்ளார். இதற்கும் தேவ இராஜ்யத்திற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் மத்தேயு காணவில்லை.

Continue reading