வேதபூர்வமான சத்தியத்திற்கு வரலாற்றில் கிடைத்த ஆரம்ப வெற்றியை (கி.பி. 318-325) முந்தைய இதழில் வந்த அத்தநேசியஸ் பற்றிய ஆரம்ப ஆக்கத்தில் பார்த்தோம். எனினும் சத்தியத்திற்கு ஏற்பட்ட ஆபத்து அத்தோடு ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை இவ்வாக்கத்தில் ஆராய்வோம்.
கி.பி. 325-361 காலப்பகுதியில், ஏரியனிசத்தைப் பின்பற்றியவர்களின் கை ஓங்கியிருந்ததுபோல் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள், ஏரியர்கள் கிட்டதட்ட வென்றுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றியது. இந்த மாற்றங்கள், இரண்டு குறிப்பிட்ட நிலைகளில் ஏற்பட்டது.