கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிறீர்களா?

கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது பற்றிய விஷயத்தில் அநேகருக்கு பிரச்சனை இருக்கிறதை நான் உணர்கிறேன். பெரும்பாலானவர்கள் இதை உணர்ச்சி வசப்படுவதோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசம் நிச்சயம் மனித உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. கிறிஸ்து தருகின்ற ஆத்மீக விடுதலை நம்மை முழுமையாகவே பாதிக்கிறது. விசுவாசத்தை அடைகிறவர்களுடைய உணர்வுகளும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறவையாக மாறுகின்றன. ஆகவே, மனித உணர்ச்சிகளுக்கும் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வதற்கும் தொடர்பில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இருந்தபோதும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, கர்த்தரின் பிரசன்னத்தை ஒருவர் உணர்கிறாரா, இல்லையா என்பதை தீர்மானித்துவிட முடியாது. உணர்ச்சிகளை மட்டும் வைத்து ஒருவருக்கு விசுவாசம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் தீர்மானித்துவிட முடியாது.

Continue reading