ஆள்பிடிக்கும் கிறிஸ்தவமா? ஆவிக்குரிய மறுபிறப்பா?

கிறிஸ்தவத்தைப்பற்றிய சரியான விளக்கத்தைக்கொண்டிராத அநேகரை நான் கிறிஸ்தவ சமுதாயத்தில் அடிக்கடி காண்கிறேன். கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக மனதில் மட்டும் கொண்டிருந்து ஆலயத்துக்கு ஆராதனைக்குப் போய்வருவதல்ல கிறிஸ்தவம். கிறிஸ்துவை நேசிக்கிற அதேநேரத்தில், மனந்திரும்புவதற்கு முன்பிருந்த சமுதாயப் பண்புகளுக்கு வக்காலத்துவாங்கி, கிறிஸ்தவம் அவற்றில் பலவற்றை நிராகரிக்கின்றதென்ற அறிவோ உணர்வோ இல்லாமல் அவற்றை வாழ்க்கையில் தொடர்வதற்குப் பெயரல்ல கிறிஸ்தவம். கிறிஸ்துதான் ஆண்டவர் என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்தவ வேதம் போதிக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டிராமல் நொன்டிச்சாக்குச் சொல்லிப் பெயரளவில் வாழ்வதல்ல கிறிஸ்தவம். மொத்தத்தில் சொல்லப்போனால் கிறிஸ்தவம் வெறும் சடங்கல்ல.

Continue reading