
ஜொசுவா ஹெரிஸ்
ஜூலை மாத முடிவில் Fox Newsல் இருந்து எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தது, ‘ஜொசுவா ஹெரிஸும் அவருடைய மனைவியும் நட்போடு பிரிந்துவாழத் தீர்மானித்துவிட்டார்கள் என்பது. இதை ஜொசுவா ஹெரிஸே தன்னுடைய இன்ஸ்டகிரேமில் பதிவு செய்திருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிரடியாக இன்னொரு செய்தியை அவர் வெளியிட்டார். ‘இனி நான் கிறிஸ்தவன் அல்ல, கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றின் அடிப்படையில் என்னைக் கிறிஸ்தவனாகக் கணிக்க முடியவில்லை. அதனால் நான் கிறிஸ்தவ நம்பிக்கைகளைவிட்டு அடியோடு விலகிவிட்டேன்’ என்பதுதான் அந்த அறிக்கை. இது கிறிஸ்தவ சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இப்போது நான் இந்த ஆக்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் வரையில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.