ஆதியாகமத்துக்கு வந்திருக்கிறது ஆபத்து!

ஆங்கிலேயரான சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய பரிணாமத் தத்துவத்தை 1859ல் தன் நூலொன்றில் வெளியிட்டார். அது எந்தளவுக்கு உலக சமுதாயத்தைப் பாதிக்கப்போகிறது என்பது டார்வினுக்கே தெரிந்திருக்க வழியில்லை. இத்தனை காலத்துக்குப் பிறகும் டார்வினின் கோட்பாடு உலக சமுதாயத்தைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. சமுதாயத்தை அது தொடாத பகுதியில்லை என்றே கூறவேண்டும். கிறிஸ்தவர்கள்கூட டார்வினின் கோட்பாட்டின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்தளவுக்கு மனித சமுதாயத்தை டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன; பாதித்தும் வருகின்றன. டார்வினின் கோட்பாடு பிசாசினால் பயன்படுத்தப்பட்டு வரும் வல்லமையான கருவி என்பதை எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கமுடியாது. டார்வினின் கோட்பாட்டில் எந்த மாற்றத்தைச் செய்தும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்த வழியில்லை. அந்தளவுக்கு அது கிறிஸ்தவத்தின் பேரெதிரியாக இருக்கிறது. டார்வினின் கோட்பாடுகள் அதிரடியாகப் பரவ ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் அதை எதிரியாகப் பார்க்க அநேக கிறிஸ்தவர்கள் தவறினார்கள். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அநேக இறையியல் அறிஞர்களையும், இறையியல் கல்லூரிகளையும் டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன.

Continue reading