வாஷிங்டனுக்குப் போகலாம் வாங்க!

சிறுவனாக இருந்தபோது எனக்கு வாசிப்புப் பழக்கம் அதிகம். சாவி என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சா. விசுவநாதன் அந்தக் காலத்தில் அருமையான ஒரு புனைநாவல் எழுதியிருந்தார். வாஷிங்டனில் திருமணம் என்பது அதன் தலைப்பு. ஆனந்தவிகடனில் அது தொடராக வந்து, பின்பு நூல் வடிவில் நாவலாக வெளிவந்தது. தமிழகத்தில் இருந்த ஒரு பிராமணக் குடும்பத்தார் வாஷிங்டனில் வசித்த பணம்படைத்த ராக்கபெலர் அம்மையாரின் விருப்பத்தினால் ஒரு தமிழ் திருமணத்தை வாஷிங்டன் நகரில் நடத்தினார்கள். அந்தத் திருமணத்திற்குத் தமிழகத்து வாடை முழுமையாக இருக்கவேண்டும் என்பதால் நரிக்குறவர்களும் தமிழகத்தில் இருந்து பிரைவெட் விமானம் மூலம் வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள். அதுவும்போதாதென்று அமெரிக்க நாய்களுக்குத் தமிழகத்து நாய்கள்போல் குறைக்க முடியவில்லை என்பதால் நாய்கள்கூட தமிழகத்தில் இருந்து வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தன. பிராமணத் தமிழில் சாவி வெலுத்துக்கட்டியிருந்த ஓர் அருமையான நகைச்சுவை புனைநாவல் அது. நான் ரசித்து வாசித்திருந்த ஒரு நூல்.

Continue reading