ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து

கடந்த சில வருடங்களாக 1 பேதுரு நூலை சபையில் பிரசங்கித்து வருகிறேன். அருமையான நூல். முக்கியமாக முதல் நூற்றாண்டில் நீதியாக வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் அதற்காக துன்பங்களை அனுபவித்தபோது அவர்களுக்கு ஆறுதலளித்து, தொடர்ந்தும் அவர்கள் தங்களுடைய கடமைகளைத் தவறாது செய்துவர ஊக்கமளித்து பேதுரு இந்நூலை எழுதியிருக்கிறார். இதற்கு மத்தியில் கடைசி அதிகாரமான 5ம் அதிகாரத்தில் மூப்பர்களின் கடமைகளைப் பற்றி விளக்கத் தவறவில்லை பேதுரு. சாதாரணமான சூழ்நிலையில் ஆத்துமாக்களை சபை மூப்பர்கள் கவனத்தோடு வழிநடத்தவேண்டியது அவர்களுடைய கடமை. அதுவும் பெருந்துன்ப காலங்களில் இன்னும் அதிகமாக உழைத்து அவர்களைக் கண்காணித்து வழிநடத்தவேண்டியது மூப்பர்களின் பெருங்கடமை.

Continue reading