தெரிந்துவைத்திருப்பதும் புரிந்துவைத்திருப்பதும்

நம்மினத்தில் வாசிப்பது என்பது குறிஞ்சிப்பூ கிடைப்பதுபோல்தான் என்பதை நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்; எழுதியுமிருக்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். இதனால் வாசிப்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று வளர்ந்திருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நல்ல நூல்களைக்கூட விலைகொடுத்து வாங்கிப் படிப்பது அநேகருக்குக் கஷ்டமானதாகத் தெரிகிறது. மலிவு விலையில் கொடுத்தாலும் வாங்குகிறவர்கள் மிக அரிது. பணமில்லை என்பது வெறும் சாக்குப்போக்குத்தான். வேறு எத்தனையோ காரியங்களுக்கு அவர்கள் பணத்தை செலவிடத் தவறுவதில்லை. நூல்களை வாங்கப் பணத்தை செலவிட அநேகருக்கு மனதில்லை. அதற்குக் காரணமுண்டு. நூல்களை வாங்கினால் அதை ஒரு தடவை வாசித்தபின் என்ன செய்வது? என்ற எண்ணம் பலருக்கு இருப்பதால் அவர்கள் நூல்கள் பக்கமே போவதில்லை. ஒருதடவை வாசிக்கப்போகிற புத்தகத்தை வாங்க ஏன் பணத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. ஒரு நல்ல ஆக்கத்தை ஒரு தடவைக்கு மேல் வாசிக்கிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த நிலைமை தொடர்ந்தால் கிறிஸ்தவம் நம்மினத்தில் மிகவும் கீழடைந்த நிலையில் பலவீனமானதாக மட்டுமே இருக்கமுடியும்; அதுவும் கிறிஸ்தவ ஊழியர்கள் அறிவற்றவர்களாக, சிந்திக்கத் தெரியாதவர்களாக, முடமாகவே இருக்கப் போகிறார்கள்.

Continue reading