பாவஉணர்வு மட்டுமே பரலோகம் போக உதவாது

இதழ் 2, 2015

“பாவத்தை உணர்தல் இரட்சிப்புக்கு மிகவும் அவசியமானது, ஆனால் அது இரட்சிப்போடு இணைந்ததல்ல” என்று ஜெரமி வோக்கர் “யார் மெய்யான கிறிஸ்தவன்?” என்ற தன்னுடைய ஆக்கத்தில் எழுதியிருக்கிறார். இது சிலவேளை வாசகர்களை சிந்திக்கும்படி செய்யலாம் அல்லது குழப்பவும் கூடும். அதுபற்றி இந்த ஆக்கத்தில் விளக்கத் தீர்மானித்தேன். எந்த அடிப்படையில் ஜெரமி வோக்கர் இதைச் சொல்லியிருக்க முடியும்? அவர் கார்டினர் ஸ்பிரிங்கின் (Gardiner Spring) நூலின் ஒரு பகுதியின் சாராம்சத்தின் அடிப்படையில் தன்னுடைய ஆக்கத்தை எழுதியிருப்பதால் நிச்சயம் அவருடைய கருத்தும் இதுவாகத்தான் இருந்திருக்கும். கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை நான் இதற்காக மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். இதே வார்த்தைகளை அவர் தன்நூலில் பயன்படுத்தியிராவிட்டாலும் அதைத்தான் அவரும் விளக்கியிருக்கிறார். இது பாவ உணர்தலைப் பற்றிப் பியூரிட்டன் பெரியவர்கள் அநேகரிடமும் பொதுவாகக் காணப்பட்ட ஒரு விளக்கம்.

Continue reading