மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்

மனந்திரும்பாமல் எவரும் பாவமன்னிப்பை அடையமுடியாது என்கிறது வேதம் (அப்போஸ்தலர் 3:19). மனந்திரும்புதல் என்ற வார்த்தையின் கிரேக்க மூலத்திற்கு அடிப்படை அர்த்தம் ‘மனதில் ஒரு விஷயத்தைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளுவது’ (change of heart) என்பதாகும். இதுவே அடிப்படை அர்த்தமாக இருந்தபோதும், இந்த அர்த்தத்தின் அடிப்படையில் மட்டும் மனந்திரும்புதலை விளங்கிக்கொள்ள முடியாது. இவென்ஜெலிக்கள் கிறிஸ்தவ பிரிவுகளில் பெரும்பாலானோர் இந்த அர்த்தத்தில் மட்டும் மனந்திரும்புதலை விளக்கி, மனந்திரும்புதல் என்பது மனத்தளவில் பழைய வாழ்க்கையைப்பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டு இயேசுவைப்பற்றிய புதிய எண்ணத்தைக் கொண்டிருப்பது என்று விளக்குகிறார்கள். சார்ள்ஸ் ரைரி (Charles Ryrie), சேன் ஹொட்ஜஸ் (Zane C Hodges) போன்றோர் இதையே செய்திருக்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே இன்று பெரும்பாலும் சுவிசேஷமும் பிரசங்கிக்கப்படுகிறது. அதனால் மனந்திரும்புதல் என்பது மனிதன் சுயத்தில், பாவநிலையில் மாம்சத்தில் இருந்து இயேசுவைப்பற்றிய தன்னுடைய கருத்தை மனத்தளவில் மாற்றிக்கொள்ளுவது என்று மட்டும் விளக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இவர்களைப் பொறுத்தவரையில் மனந்திரும்புதல் மனிதனுடைய கிரியையாகிவிடுகிறது. இதுவே செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிசப் போதனை. இதன்படி மனிதன்தானே சுயமாக மனந்திரும்பி பாவமன்னிப்பை அடையக்கூடியவனாக இருக்கிறான்; பிடிக்காதபோது அதை உதறிவிடக்கூடியவனாகவும் இருக்கிறான். ஆனால், இதுவல்ல மனந்திரும்புதலுக்கு வேதம் தருகின்ற விளக்கம்.

Continue reading