மொழியாக்க வறட்சி

என் இலக்கியப்பணியில் மொழியாக்கமும் ஒரு சிறு அங்கம். தற்காலத்தில் நம்மினத்தில் அதிகளவுக்கு அறிமுகமாகாமல் இருந்துவரும் சத்தியங்களை அருமையாக விளக்கியிருப்பவர்களின் நூல்களையோ அல்லது ஆக்கங்களையோ இருந்திருந்து மொழியாக்கம் செய்துவருகிறேன். மொழியாக்கம் சிக்கலானது; சிலம்பாட்டம் போன்றது. சிலம்பு சுற்ற உடல்வலிமை மட்டுமல்லாமல் அதை லாவகமாகச் சுற்றிச் சுழலும் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். சிலம்பு சுற்றுவதில் நளினம் தெரியவேண்டும். கையில் தடி வைத்திருப்பவர்களெல்லாம் சிலம்பாட்டக்காரர்களா என்ன! நெடுங்காலப் பயிற்சி அதற்குத் தேவை. அதுபோலத்தான் மொழியாக்கமும். எழுத்துத்துறையில் காணப்படும் சோகங்களில் இரண்டை நம்முன்வைக்கும் பிரபல பழம் படைப்பாளி அசோகமித்திரன், ஒன்று மொழிபெயர்ப்பது, இரண்டாவது, மொழிபெயர்க்கப்படுவது என்கிறார். அவற்றில் காணப்படும் பிரச்சனைகளை அவர் உணர்ந்திருப்பதாலேயே இப்படி வர்ணித்திருக்கிறார். பொதுவாகவே மொழிபெயர்ப்பு நூல்கள் நம்மொழியில் சிறப்பாக இல்லை என்பதே தேர்ந்த படைப்பாளிகளின் கருத்து.

Continue reading