2. நாம் பாவம் செய்கிறபோது, நமக்கு எதிராக நாம் செயல்படுகிறோம்.
2.1. பாவம் மனிதர்களாகிய நமக்கு, சரீர ரீதியில் எதிரானது.
நாம் தேவசாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறபடியால் (ஆதியாகமம் 1:26), கடவுளுடைய பார்வையில் தீமையான எதுவும், நமக்கு கேட்டையே விளைவிக்கும். நமக்கு உச்சகட்டமான நன்மைதரக்கூடியதொன்று இருக்குமானால், அது கடவுளோடு நாம் நல்லவிதமான ஐக்கியத்தைக் கொண்டிருப்பதுதான். நாம் கைக்கொள்ளும்படி கடவுள் ஏற்படுத்தியிருக்கிற கட்டளைகள், அவருடைய பரிசுத்தத் தன்மையை நமக்கு வெளிப்படுத்துவதாக மட்டுமில்லாமல், அவருடைய படைப்புகளான நம்முடைய நன்மைக்காகவுமே ஏற்படுத்தியிருக்கிறார். பாவம் நமக்கு, இந்த வாழ்க்கையிலும் நம்முடைய மரணத்திற்கு பிறகுள்ள வாழ்க்கையிலும் எந்தவிதத்திலெல்லாம் பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது என்பதை நான் விரிவாக விளக்க விரும்புகிறேன்.